திங்கள், 17 செப்டம்பர், 2012

பயணப்படி தொடர்பாக EE/O&M/DPM அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்


பெறுநர்

செயற் பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,
தாராபுரம் கோட்டம், (தீயணைப்பு நிலையம் அருகில்),
தாராபுரம்

அய்யா,

பொருள்: பயணப்படி உச்சபட்ச அளவு - சம்பந்தமாக.

       TANGEDCO வில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் பயணப்படி உச்சபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கணக்கீட்டு பணி செய்பவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் முக்கியப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி Special Certificate பயணப்படி பட்டியலில் கீழ்க்கண்டவாறு அளித்திடும்போது அதை பயணப்படி அனுமதிக்கும் அதிகாரி அவருக்கு மேல்நிலை அதிகாரியிடம் அனுப்பி Approval பெற்று, தொழிலாளி அளித்த பயணப்படி தொகையை வழங்கிடுவது நடைமுறை சான்றிதழ் கீழ்வருமாறு அளிக்கப்படும்.

Certified that the trips are bonafide and performed at the interest of the Board and geninue.

        ஆனால் மேற்கூறிய நடைமுறைக்கு மாறாக பயணப்படித் தொகை கோரியதை அளிக்காமல் குறைவான தொகையை வழங்கியுள்ள நிகழ்வு தாராபுரம் கோட்டத்தில் நிகழ்ந்துள்ளது. (உம்: திரு. பழனியப்பன், Helper cum Meter Reader, தளவாய்ப்பட்டிணம் பிரிவு)

       மேற்கூறிய தொழிலாளர் பணிக்கு உச்சபட்ச அளவு நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் அவர் அனைத்து மின் இணைப்புகளையும் கணக்கீடு செய்திடல் வேண்டும். எனவே அவர் பயணப்படி பட்டியலில் கோரியுள்ள தொகைளை Pass செய்து பட்டுவாடா செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

     மேலும் நடைமுறைகளை மாற்றிட உத்தரவு ஏதும் இருப்பின் எங்களுக்கு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

ஒப்பம் நாள். 14.09.2012
திட்டச் செயலாளர்,
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு
உடுமலை திட்டம்.

நகல்: கோட்டச் செயலாளர்/COTEE/CITU.
           உதவி மின் பொறியாளர்/ தளவாய்பட்டிணம் பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்